காற்று.1
நீங்கள் ஒரு சினிமா பைத்தியமா..?
நீங்கள் வாழ்வை சந்தோசமாகக விரும்புவரா..?
நீங்கள் வலிகளை உணர்ந்தவரா..?
நீங்கள் சாதிக்க விரும்பியவரா..?
நீங்கள் தோல்வியை அனுபவித்தவரா..?
இப்படி எல்லாவட்டிரிலும் ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்வில் நுழைந்திருக்குமானால்..நானும் உங்களில் ஒருவனாக அறியப்படுவேன்..என் பெயர் மூர்த்தி.. பிணத்தை கொத்தித்தின்னும் கழுகு போல சினிமா என்னை கொத்தி தின்றதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் எழுதுகிறேன்..
ரதி ..இங்கிருந்துதான் நான் துவங்குகிறேன்..யாரும் அறியாத பொழுதொன்றில் என் மீது நம்பிக்கை கொண்டு விழுந்த விதை அது..தாயின் கருவறையை போல பல வருடங்கள் என்னுள் உருத்திரண்டு கொண்டிருந்தது..அதற்க்கு கைகளையும் கால்களையும் நான் பார்த்த மனிதர்களில் இருந்து புதுப்பித்து கொண்டே வந்தேன்..நான் வாழ்ந்த சூழலுக்கு பழக்கப்படுத்தியிருந்தேன்..ரத்தினமும் திலகாவும் என்னை நிரப்பியிருந்தார்கள்..ஆனாலும் வயிறு பசிக்கத்தான் செய்ததது..குடும்பத்தை விட்டு நான் புழுதியேறிய தெருவை விட்டு, என் அன்பையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை விட்டு புறாக்கூன்டுகளை போல எச்சமும்.குப்பையும் மனக்கிடன்கெங்கும் வழிந்த சென்னை நகரத்திற்குள் வந்ததிலிருந்து..இந்த பசியும் என்னோடு ஒட்டிக்கொண்டது..உதவி இயக்குனராய் சேர்வது என்பது அத்தனை எளிதல்ல என்கிற சூத்திரத்தை நான் சிறு வயதிலிருந்தே கற்று வந்தவன் தான் ஆனாலும்..ஒரு வேலை உணவுக்கே தாளமிடுவோம் என நினைத்து பார்க்கவில்லை..
விரும்பி ஏற்றுகொண்ட வலி
ReplyDeleteதோல் வியிலும் பசியிலும்
துவண்டுவிடாமல்
சாதிக்க வேண்டும் என்ற
மாறா வெறியில் --
விரும்பி ஏற்றுகொண்ட வலி
வெற்றியில் மறைந்து விடும்
நண்பா --
This comment has been removed by the author.
ReplyDeleteபசியும் வலியும் பொதுதான் என்றாலும் இதே பசியும் வலியும் உங்களைப் போல ஒரே தளத்தில் ஒரே இடத்தில் அனுபவித்ததால் உங்கள் வரிகளையும் வழிகளையும் எளிதாக உணர முடிகிறது சென்னையில் உங்களைப் போலவே சில காலம் வாழ்ந்துள்ளேன் நண்பனுக்கும் தோழனுக்கும் உள்ள வேறுபாடு வெறும் வார்த்தை அல்ல என்று அறிந்து கொண்ட காலங்கள் அவை
ReplyDeleteவலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. வலியை சுமந்து வந்துக் கொண்டு இருக்கும் இருக்கும் உங்களுக்காகவே, வெற்றிகள் காத்திருக்காமல் ஒன்றும் இல்லை. நிச்சயம் வெகு விரைவில் அவைகள் உங்களை வந்து அடையும். தங்கள் வாழ்கை பயணத்தில் விடாமல் கைக் கோர்த்து வரும். தளராத மனம் இருக்கும் தங்களை தேடி "தனம்" வந்த வழியினூடே புகழும் பெருமையும் தேடி வரும். வாழ்த்துக்கள்
ReplyDelete