இன்றுதான் படத்தொகுப்பு ஆரம்பமாகிறது...
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பின்னோக்கி இழுக்க,முன்னோக்கி பாயவேண்டும் என்கிற ஆவேசத்தில் எனக்கு பரிச்சயமில்லாத சில ஒளிப்பதிவு கருவிகளையும் பயன்படுத்தியிருந்தோம்..இதனால் தொழில் நுட்பத்தில் தேர்ந்த, தினசரி நவீனங்களிலும், இணையத் தளங்களிலும், அறிவு தேடலிலும் தன்னை நுழைத்துக் கொள்கிற படத் தொகுப்பாளரின் தேவை இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக பேச்சு கோவிந்தனிடமும், மகேந்திரனிடமும்,இருந்தன. அகவே அவர்களது படத்தொகுப்பு கூடத்தில் பதிவிறக்கம் செய்யும் பணி தொடங்கியது. எனது சிந்தனைகள் அங்கே இல்லை. தொடர்ந்த நாட்களில் எனக்கு ஏற்பட்ட மன பிறழ்வின் மாற்றமே இது. காட்சிகள் சிறு திரையில் ஓடத்தொடங்கின. நுண் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஒளிப்பதிவு கருவியில் பதிவுகள் திரையில் தோன்றியது. எனது நினைவுகள் காட்சி நடந்தேறிய சூழ்நிலையை தானே உள்வாங்க துவங்கியது.
அது ஒரு கொடூரமான நாள்.
பீ-டூ என அழைக்கப்பட்ட ஒளிப்பதிவு கருவியில் இருந்த முதல் நாள் காட்சி திரையில் ஓடத் துவங்கியது.
செல்வி பச்சையை பற்றி கேவலமாக பேசிவிட்டு அழுத படியே செல்ல, ஆற்றாமை தாங்காமல் கிழவர் பச்சையை அடித்துக் கொண்டே அழுவார்...இதுதான் காட்சி...
தாளாத துயரமாக அந்த காட்சி இருந்தாலும் உள்ளுக்கும், வெளியேயும் எனக்குள் வெடித்த சந்தர்ப்பங்களை தொலைந்து, அந்த காட்சியை எப்படியாவது எடுத்து முடித்து இன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவஸ்தையில் இருந்தேன்.
எல்லாரும் என்னை கைவிட்டு விட்டார்கள். நான்கு நாட்களாக உச்சத்தில் இருந்த பிரச்சனைகளின் மையப் புள்ளி அந்த நாள். இனி படப் பிடிப்பு தொடருமோ, தொடராதோ என்கிற கடைசி தருணத்தில் ஒளிப்பதிவாளர் அன்பு ஸ்டாலினின் தைரிய உற்சாகத்தில் நான் மேற்கொண்ட முயற்சி..
ரெட் ஒன் என்கிற ஒளிப்பதிவு கருவியின் சொந்தக்காரர்களின் சதியா அல்லது எனக்கு தயாரிப்பாளர் என்கிற பெயரில் அசோக் நடந்து கொண்ட விதமா எதுவும் புரியவில்லை...என்னைச்சுற்றி இருந்த உலக வெளிச்சம் அத்தனையும் தடை பட்டிருந்த நேரம் அது. இனி மீளவே முடியாது என்கிற கடைசி நுனியில் தவித்துக்கொண்டிருந்த அகால பொழுது அது. ஒன்று படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற தீராத பிணியில் நீடித்திருந்த சமயம் அது. ஆதரிக்க யாருமில்லை. முடிவெடுக்கும் கணங்களும் அருகில் இல்லை. உலக மனிதர்கள் எல்லாம் என்னை குத்தீட்டி கொண்டு கூர்வாளால் குத்திக்கொண்டு இருந்தனர். தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்தமாக துரோகமிழைத்து போலி ஜனநாயகத்தின் அங்கமாய் நிற்க வேண்டிய கட்டாயம். நான் உணர்ந்திருந்த மார்க்ஸ் என்னை மென்று தின்று பார்த்தார். அறிவு என்பது ஒரு வகை ஏமாற்று. தான் வளர்வதற்காக பிறரை சுரண்டும் இன்றைய சூட்சுமம் என்று போதித்த நானே அதுவாகி போன களம். யாரிடமும் பேச முடியவில்லை. என்னுடன் பணியாற்றிய சக கலைஜர்களின் முகம் இறுகி கிடந்தது. இந்திய சினிமாக்கள் போதித்த ஒளிப்பதிவு கருவியிலிருந்து வேறு கருவிக்கு மாறியது எல்லாருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இது எனது மன நிலையை பல கூறுகளாக சிதறியடித்தது.
சொந்த ஊரில் படம் பிடிக்க வந்தது முதல் குற்றம். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மக்களில் ஒருவனாக நின்றதால், சினிமா ஏற்படுத்திய மாயவெளியில் எனது ஊர் கூர்ந்து என்னை நோக்கிய தருணம். அதே ஊரில் இருந்து இயக்குனர் வாய்ப்புக்காக ஓடிய நான்கு பேரில் நானும் ஒருவன்.அவர்களுக்கு கிட்டாத வாய்ப்பு எனக்கு கிட்டியது. இதை நான் சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிற துடிப்பில் முதல்,முதலாக ஒரு விசயத்தை உடைத்தேன். உடையும் தருணங்கள் மிகக்கொடூரமானவை.
ஆம் அதுவும் ஒரு கொடூரமானது...
அது பச்சை தங்கையின் திருமணம் நடக்க வேண்டிய மண்டபம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரெட் ஒன் ஒளிப்பதிவுக் கருவியாளர்கள் நாங்கள் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் காசோலையை போட்டு வங்கியில் பணம் இல்லை என்பதால் கிளம்பி விட்டார்கள். அந்த தொகையை மறுநாள் காலை நான் கொடுப்பதாக சொல்லியும் கேட்க தயாராக இல்லை. இதுவரை எல்லோருக்கும் படிகள் சரியாக கொடுக்கப்படும். அவர்கள் கேட்கவில்லை.
பெரம்பலூரில் ஒரு திருமண மண்டபம் பார்த்து வைத்து இருந்தோம். நாளை மறுநாள் எடுப்பதாக முடிவு. அதற்குள் இவர்கள் மொத்தமும் கிளம்ப, என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ரெட் ஒன் உரிமையாளர் பேசிய பேச்சுக்கள் என்னை நெருப்பில் உயிரோடு சுடுவதை போல இருந்தது.
"பணம் கொடுக்க வக்கில்ல... நீ எல்லாம் சினிமா எடுத்து என்ன செய்யப்போற.. நான் போலீஸ்க்கு போன் பண்றேன். ரிட்டர்ன் ஆன செக்க வச்சி உங்கள இனிமே படம் எடுக்க விடாம செயப்போறேன்" என கத்தினார்.
தொடர்ந்து நடக்க வேண்டிய படப்பிடிப்பு அப்படியே நின்றது. அதற்கு முதல் நாள் ராஜேஷிடம் பணம் கொடுத்து அனுப்புவதாக சொன்ன அசோக்கும் கொடுத்து அனுப்பவில்லை. இதற்கு மேல் நிறுத்தி விடுங்கள் என்று ராஜேஷ் வந்து சொன்னான். ராஜேஷ் எனது உதவியாளர். அவனைத்தான் சென்னையில் அசோக் தொகுத்து தரும் பணங்களை கொண்டு வர சொல்லி இருந்தேன். அவனிடமும் பணம் இல்லை.
ரெட் ஒன் கிளம்பியதால் மொத்த படப்பிடிப்பு குழுவையும் அனுப்பி ஆக வேண்டும். கையில் பணம் இல்லாததால் திருமண மண்டப அலங்காரங்களை கூட செய்ய முடியாமல் ஒரு திருமணம் நடக்க இருந்த மண்டபத்தை தேர்வு செய்து, அவர்களிடம் திருமணம் நாளை முடிந்ததும் நான் வரும் வரை அலங்காரங்களை அகற்ற வேண்டாம் என கெஞ்சி இருந்தேன்.
அப்படித்தான் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் நடந்தது. கையில் ஒரு ரூபாய் கிடையாது. அவ்வப்போது அசோக் அனுப்புகிற பத்தாயிரமும், ஐயாயிரமும் படப்பிடிப்பில் ஒரு மணி நேரத்திற்கு கூட தாங்காது. கிடைக்கும் இடங்களில் படம் பிடித்தோம். அவ்வளவுதான். நாளைக்குள் அவர்களுக்கு முழுவதாக பணம் தருகிறோம் என சொல்லி ஒரு நாள் தள்ளிப்போட்டேன்.
யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லா முகங்களும் என் மீதே கவிழ்ந்து இருந்தன. 5.30க்கே படப்பிடிப்பை முடித்துக்கொள்வதாக சென்னைக்கு கிளம்பி விட்டேன். கதை நாயகியை வேறு இன்றுதான் கேரளாவில் இருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக வர வைத்து இருந்தோம். அவளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம்.
மது விடுதிக்குள் நுழைந்தேன். நான் மதுவை எப்பொழுது குடித்தாலும் மிக சுவையாக குடிப்பது வழக்கம். எந்த சூழ்நிலையிலும் இது மாறாது. நான் எப்பொழுதும் என்னை சுற்றியே இயங்குவதால் என்னிடமிருந்து என் நிதானத்தை துறந்து வார்த்தைகளை விடக்கூடாது என்பது எனது வைராக்யமாகவே இருந்தது. அதையும் தாண்டி பிறர் வைத்திருந்த மதுவையும் செர்த்துக் குடித்தேன். என்னால் அந்த கணத்தை தாங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்காக தொடர்ந்து பேசுகிற நான், அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல், எனது படத்தையும் அவர்கள் உப்புமா படமாக எண்ணும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்கிற ஆதங்கமும், என் மீதே கவிழ்ந்த பொறுப்பும் இனி வாழவே கூடாது என்ற முடியும் ஏற்பட்ட கணம் அது...
என்னுடன் வந்திருந்த சிவாவின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு யாரிடமும் சொல்லாமல் நான் மட்டும் கிளம்பினேன்.
கண்ணீரும், அழுகையும் உடைத்துக்கொண்டு ரணமாய் ஓடியது.
எதோ தவறு நடக்க போகிறது என உணர்ந்த சிவா உடனே வேறு வாகனத்தில் என்னை பின் தொடர்ந்து இருக்கிறான். நான் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. என் கண்ணுக்குள்ளே மகன் வைகறையாளன், மகள் மதிவதனியின் முகமே வந்து, வந்து போனது.
வாகனத்தை ஓட்ட முடியவில்லை.
ஊரைத்தாண்டி நெடுந்தொலைவில் ஆலத்தூர் போகும் வழியில் சுடுகாடு ஒன்று இருந்தது. அங்கே போனதும் எனது எண்ணம் இன்னும் வேறாய் மாறியது. இதோ இந்த சுடுகாட்டில்தானே எனது அண்ணன்கள் இருவரையும் எரித்தோம். மொத்தமாக எங்களது வாழ்நாள் நம்பிக்கையை எரித்த இடம் இதுதானே.
இங்கேயே...இங்கேயே...நானும் எரிவேன்...எனது சந்ததியினர் மாண்டு சாம்பலான அதே இடத்தில் நாமும் நம்மை தொலைப்போம் என வண்டியை அப்படியே விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து அழுதேன்.
"அப்பா... நீ ஏன் என்னை விட்டுட்டு போன... நீங்கள்லாம நான் இப்படி கேவலமா சாகறத பார்க்க கூடாதுன்னு போயிட்டிங்களா?"...
எனது கதறல் சுடுகாட்டின் அருகே இருந்த புளிய மரத்தில் பட்டுத்தெரித்தது. அதற்குள் சிவா அங்கே ஓடோடி வந்துவிட்டான். அவன் வேகமாய் என்னை பிடித்து இழுத்தான். அவன் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையில் அப்படி ஒரு மோசமான மனநிலையுடன் கூடிய மனிதனின் முகத்தை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிவாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதேன். சிவா நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து எனது அண்ணன் சங்கருக்கு அலைபேசியில் பேசினான். நான் எனது முடிவிலிருந்து மாறவே இல்லை.
Wednesday, December 29, 2010
Tuesday, December 21, 2010
காற்று-5
திலகா...அடர்ந்த வார்த்தைகளால் பின்னப்பட்ட முகம்..எங்களுக்கு தெரிந்து எங்க பள்ளியோடத்துக்கு தினம் ஒரு சட்டை போட்டுட்டு வறது இவ மட்டும் தான்..படிக்கறதிலையும் கெட்டி.ஐந்தாவதுக்கு கூட டியுசன் படிப்பது எங்க ஊர்ல இருக்கற இருக்கிற சில பேர்ல இவளும் ஒருத்தி..வாத்தியார் எது கேட்டாலும் டியுசன்ல படிச்சத வச்சி பட்டு பட்டுன்னு பதில் சொல்லிடுவா..எப்பவும் பௌடர் போட்டு ரெட்டை சடை பின்னி பூ வச்சிக்கிட்டு வரத்தும் இவ ஒருத்திதான்..இன்னிக்கு கனகாம்பரம் வச்சிருந்தா..
நான் அப்பராசு கடையில் எடுத்தது வரிக்கி ..சற்று பெரிய பொட்டணமாய் இருந்ததால் திருட்டுத்தனமாக எனது புத்தக பையில் வைக்க கடினமாக இருந்தது..எப்பதான் அவ பார்த்துட்டா..எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை..தவக்களை அவளை பார்த்து வையில் கை வைத்து அதட்டலாக போ என்கிறான்..அவளோ சொல்லுவேன் என பதிலுக்கு சைகை பண்ண நானும் தவக்களையும் மத்த பசங்களுக்கு சாடை காட்டிட்டு.,வேகமா போயி,
"உனக்கும் தரேன் சொல்லாத"
குசுகுசுன்னு சொல்ல,எனக்கு வேணாம் வேணாம் என அவள் சொல்லி விட்டு கடைக்காரனை பார்க்க தவக்களை சட்டென அவள் வாயை பொத்தி வேகமா இழுக்க,அவள் திமிர.."டேய் வாங்கடா "என கத்தி விட்டு நாங்க எடுத்தம் பாரு ஓட்டம் இளந்தோப்பு போய்த்தான் நின்னம்..
எல்லோருக்கும் மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க...எங்கள் அனைவருக்கும் வெட, வெடத்தது...
திலகா இந்நேரம் அப்பராசுவிடம் சொல்லியிருப்பாள். அப்பராசு பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பார். குண்டு வாத்தி இந்நேரம் எங்கள் வீட்டுக்கு பசங்களை அனுப்பிருப்பான். இப்படி எண்ணங்கள் ஓடியது. இளந்தோப்பில், இளஞ்சூட்டில் கிடந்த பாறையில் அமர்ந்த படியே நாங்கள் திருடிய சூசுபரிகளையும், மைசூர்பாக்கையும், தேனு முட்டாயையும் பார்த்தபடியே இருந்தோம். நேரம் ஆக,ஆக... பயம் பசியாகி திருடியதை தின்ன ஆரம்பித்தோம். இளந்தோப்பு குட்டையில் கிடந்த நீரை குடித்தும் பசி ஆற வில்லை. தவக்களை ஒருவனை தண்ணிரில் தள்ளி விட்டான். உடனே எல்லாரும் தண்ணிரில் குதித்தோம். எங்க கூட இருந்த ரகு எங்களை விட உயரமாக இருப்பான். ஆனால் நீச்சல் இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்கான். அதனால அவன் மட்டும் மேலயே உட்காந்துகிட்டன்.
மத்தவங்க பசிய மறக்க ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சோம்.. அதுக்குள்ள ரகு புளிய மரத்துல இருந்து புளியம்பிஞ்சி, புளியன்கொளுந்து,புளியம்பூ எல்லாத்தையும் பிச்சி ,வெடி வச்சி ஒடைச்ச பாறையில் வெடி வண்டியோட இரும்பு ராடு இறங்கி அங்கங்க குழி மாதிரி இருக்கும்.அந்த குழியில எல்லாத்தையும் போட்டு கூரான கருங்கல்லால உரல்ல இடிக்கிற மாதிரி இடிச்சி, கையில மிச்சமிருந்த தேனு முட்டாயையையும் போட்டு அதக்கி சோறு மாதிரி செஞ்சி வச்சிருந்தான். குளிச்சிபுட்டு ஈர தலையோட, ஈர சட்டையோடு மேல ஏறி வந்து கடுஞ்சூடு ஏறி கிடந்த பாறையில் படுத்துக் கிடந்தோம்.
பாறை வெயில் எங்களை ஒண்ணுமே செய்யாது. ஏன்னா, நான் எப்பவும் பள்ளி விடுமுறையில காட்டுக்கு போனா பருத்தி செடி நெழல படுத்து தூங்குற ஆளு.நெழலு நான் துங்க ஆரம்பிக்கிறப்ப மட்டும்தான் இருக்கும். சூரியன் மேல ஏற, ஏற நெழலு வெயிலா மாறி உடம்ப சுட்டு எடுக்கும். ஆனா அதுல ஒரு மாதிரி சுகம் இருக்கும். அப்படியே கரு மண்ணும் உடம்ப சுடும். ரெண்டு சூடும் சேர்ந்து என்ன இன்னும் நல்லா தாலாட்டும். ஆளுங்க பருத்திய பொறுக்கி இடுப்புல ஒரு துணி கட்டி அதுலதான் சேர்ப்பாங்க. மொத்தமா சேர, சேர அத மூட்டையில அடக்குவாங்க. எல்லா ஆளுக்கும் தூரத்துல போற பழனி முருகன் பஸ் அடிக்கிற ஆரன்தான் நேரம். அடுத்த ஊரு போற வரைக்கும் ஆரன் அடிச்சிட்டே போவான். அதான் ஆளு காலையிற நேரம்.
அப்புறமா, எங்கம்மா பய சாப்டாம கிடக்கிறான்னு காடு பூரா தேடும். நான் படுத்திருக்கிற பருத்தி செடி, போதும் போடான்னு ஒரு பருத்தி காய உடம்பு மேல எரியும். அப்புறந்தான் அம்மா கூப்பிட்டது என் காதுல விழும். அப்பறம் அம்மா என்ன கூட்டிட்டு போய் தென்னை மரத்துல தொங்க விட்ருக்க தூக்கு வாளிய எடுத்து சோறு போடும். எனக்கு இலையில சாப்பிடருதுன்னா அவ்ளோ ஆனந்தம். நானே ஓடிப்போய் கொட்டைத்தழைய பறிச்சிட்டு வந்துருவேன். கொட்டைதழையோட அடித்தண்ட பத்திரமா வச்சிருப்பேன். அது எதுக்குன்னா நொரை பூண்டு முட்டை விடுறத்துக்கு.
தண்ட இறக்கி தண்ணியில ஊற வச்சிட்டா, அதே சோப்பு மாதிரி நுரை தள்ளும். அது இல்லாட்டி எள்ளுத்தழை... அந்த நுரை தண்ணிய ஊதினா வரும் பாரு.. மொட்டு, மொட்டா ஆவாரம் பூ மாதிரி நுரை மொட்டு... வாய், முகம், கன்னம் எல்லா இடத்திலையும் நுரை மொட்டு பாக்க அவளவு அழகா இருக்கும். அதுக்குதான் இந்த கொட்டை தண்டு.
அம்மா கம்மஞ்சோத்து உருண்டைய கொட்டை தலையில எடுத்து வச்சிக்கிட்டு, எம்புட்டு உயரத்துல கட்டி உட்டாலும் இந்த நெருப்பு எறும்பு விடாம துரத்தி, கண்டுபுடிச்சி சோத்த திங்க வந்துரும். வரதுல பாதிக்கு, பாதி தண்ணியில உசுர உட்ரும். சில கம்மஞ்சோத்த தின்னுப்புட்டு தண்ணியில மயக்குதுல மிதந்து கொஞ்ச நேரம் கழிச்சி அதுகளும் செத்து போகும் . எப்பவுமே இப்படிதான். நாங்க எறும்பு சோறு சாப்பிடிறது வழக்கமா போச்சி. கிட்டதிட்ட எல்லா விவசாயிகளுக்கும் இதான் வச்சுக்கிங்களேன். அம்மா கூட சொல்லுவா எறும்ப எடுத்து போடாம சாப்பிடு.. அது கண்ணுக்கு நல்லதுன்னு..
எங்க கண்ணு எல்லாம் குட்டை தண்ணியில குளிச்சதுல செவந்து கிடந்தது. ரகு எல்லாருக்கும் நொனா பழத்தையும், புளியஞ்சோத்தையும் வச்சி கொடுத்தான். எல்லாரும் நல்லா தின்னம். அப்பத்தான் பள்ளியோடம் உடுற பெல்லு சத்தம் கேக்குது. எல்லாரும் பயந்து, பயந்து பள்ளிக்கூடத்திருக்கு போனால், கள்ளிகாட்டான் குருவி சத்தம் தவிர பள்ளிக்கூடத்துல ஒத்த ஆளு இல்ல. அங்க இருந்து பயந்து, பயந்து வீட்டுக்கு போனால் வீட்டுல யாரும் இல்ல. காட்டுல இருந்து இன்னும் யாரும் வரல... எப்படியும் ஆறு மணியாயிடும்னு தெரியும்.
மெல்ல நடந்து பாய் தெருவுக்கு போனேன். பயம் எனக்குள்ள அப்படியே இருந்தது. திலகா வீடு இருக்கிற தெருவா இருந்தாலும், எங்க வீடு இருக்கிறது இது வரைக்கும் அவளுக்கு தெரியாது. சுத்தி,முத்தி பார்த்துகிட்டே நடந்தேன். யாரோ பார்க்கிற மாதிரி தோணவும் திரும்பி பார்த்தேன். ஒரு சன்னல்ல நின்னு என்னையே உத்துப் பாத்துட்டு இருந்தா திலகா. நான் அவள பார்க்க, அவளோ எதுவும் நடக்காத மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு... அது இப்பவும் மனசுல தங்கி கிடக்கிற சிரிப்பு...
நான் அப்பராசு கடையில் எடுத்தது வரிக்கி ..சற்று பெரிய பொட்டணமாய் இருந்ததால் திருட்டுத்தனமாக எனது புத்தக பையில் வைக்க கடினமாக இருந்தது..எப்பதான் அவ பார்த்துட்டா..எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை..தவக்களை அவளை பார்த்து வையில் கை வைத்து அதட்டலாக போ என்கிறான்..அவளோ சொல்லுவேன் என பதிலுக்கு சைகை பண்ண நானும் தவக்களையும் மத்த பசங்களுக்கு சாடை காட்டிட்டு.,வேகமா போயி,
"உனக்கும் தரேன் சொல்லாத"
குசுகுசுன்னு சொல்ல,எனக்கு வேணாம் வேணாம் என அவள் சொல்லி விட்டு கடைக்காரனை பார்க்க தவக்களை சட்டென அவள் வாயை பொத்தி வேகமா இழுக்க,அவள் திமிர.."டேய் வாங்கடா "என கத்தி விட்டு நாங்க எடுத்தம் பாரு ஓட்டம் இளந்தோப்பு போய்த்தான் நின்னம்..
எல்லோருக்கும் மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க...எங்கள் அனைவருக்கும் வெட, வெடத்தது...
திலகா இந்நேரம் அப்பராசுவிடம் சொல்லியிருப்பாள். அப்பராசு பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பார். குண்டு வாத்தி இந்நேரம் எங்கள் வீட்டுக்கு பசங்களை அனுப்பிருப்பான். இப்படி எண்ணங்கள் ஓடியது. இளந்தோப்பில், இளஞ்சூட்டில் கிடந்த பாறையில் அமர்ந்த படியே நாங்கள் திருடிய சூசுபரிகளையும், மைசூர்பாக்கையும், தேனு முட்டாயையும் பார்த்தபடியே இருந்தோம். நேரம் ஆக,ஆக... பயம் பசியாகி திருடியதை தின்ன ஆரம்பித்தோம். இளந்தோப்பு குட்டையில் கிடந்த நீரை குடித்தும் பசி ஆற வில்லை. தவக்களை ஒருவனை தண்ணிரில் தள்ளி விட்டான். உடனே எல்லாரும் தண்ணிரில் குதித்தோம். எங்க கூட இருந்த ரகு எங்களை விட உயரமாக இருப்பான். ஆனால் நீச்சல் இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்கான். அதனால அவன் மட்டும் மேலயே உட்காந்துகிட்டன்.
மத்தவங்க பசிய மறக்க ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சோம்.. அதுக்குள்ள ரகு புளிய மரத்துல இருந்து புளியம்பிஞ்சி, புளியன்கொளுந்து,புளியம்பூ எல்லாத்தையும் பிச்சி ,வெடி வச்சி ஒடைச்ச பாறையில் வெடி வண்டியோட இரும்பு ராடு இறங்கி அங்கங்க குழி மாதிரி இருக்கும்.அந்த குழியில எல்லாத்தையும் போட்டு கூரான கருங்கல்லால உரல்ல இடிக்கிற மாதிரி இடிச்சி, கையில மிச்சமிருந்த தேனு முட்டாயையையும் போட்டு அதக்கி சோறு மாதிரி செஞ்சி வச்சிருந்தான். குளிச்சிபுட்டு ஈர தலையோட, ஈர சட்டையோடு மேல ஏறி வந்து கடுஞ்சூடு ஏறி கிடந்த பாறையில் படுத்துக் கிடந்தோம்.
பாறை வெயில் எங்களை ஒண்ணுமே செய்யாது. ஏன்னா, நான் எப்பவும் பள்ளி விடுமுறையில காட்டுக்கு போனா பருத்தி செடி நெழல படுத்து தூங்குற ஆளு.நெழலு நான் துங்க ஆரம்பிக்கிறப்ப மட்டும்தான் இருக்கும். சூரியன் மேல ஏற, ஏற நெழலு வெயிலா மாறி உடம்ப சுட்டு எடுக்கும். ஆனா அதுல ஒரு மாதிரி சுகம் இருக்கும். அப்படியே கரு மண்ணும் உடம்ப சுடும். ரெண்டு சூடும் சேர்ந்து என்ன இன்னும் நல்லா தாலாட்டும். ஆளுங்க பருத்திய பொறுக்கி இடுப்புல ஒரு துணி கட்டி அதுலதான் சேர்ப்பாங்க. மொத்தமா சேர, சேர அத மூட்டையில அடக்குவாங்க. எல்லா ஆளுக்கும் தூரத்துல போற பழனி முருகன் பஸ் அடிக்கிற ஆரன்தான் நேரம். அடுத்த ஊரு போற வரைக்கும் ஆரன் அடிச்சிட்டே போவான். அதான் ஆளு காலையிற நேரம்.
அப்புறமா, எங்கம்மா பய சாப்டாம கிடக்கிறான்னு காடு பூரா தேடும். நான் படுத்திருக்கிற பருத்தி செடி, போதும் போடான்னு ஒரு பருத்தி காய உடம்பு மேல எரியும். அப்புறந்தான் அம்மா கூப்பிட்டது என் காதுல விழும். அப்பறம் அம்மா என்ன கூட்டிட்டு போய் தென்னை மரத்துல தொங்க விட்ருக்க தூக்கு வாளிய எடுத்து சோறு போடும். எனக்கு இலையில சாப்பிடருதுன்னா அவ்ளோ ஆனந்தம். நானே ஓடிப்போய் கொட்டைத்தழைய பறிச்சிட்டு வந்துருவேன். கொட்டைதழையோட அடித்தண்ட பத்திரமா வச்சிருப்பேன். அது எதுக்குன்னா நொரை பூண்டு முட்டை விடுறத்துக்கு.
தண்ட இறக்கி தண்ணியில ஊற வச்சிட்டா, அதே சோப்பு மாதிரி நுரை தள்ளும். அது இல்லாட்டி எள்ளுத்தழை... அந்த நுரை தண்ணிய ஊதினா வரும் பாரு.. மொட்டு, மொட்டா ஆவாரம் பூ மாதிரி நுரை மொட்டு... வாய், முகம், கன்னம் எல்லா இடத்திலையும் நுரை மொட்டு பாக்க அவளவு அழகா இருக்கும். அதுக்குதான் இந்த கொட்டை தண்டு.
அம்மா கம்மஞ்சோத்து உருண்டைய கொட்டை தலையில எடுத்து வச்சிக்கிட்டு, எம்புட்டு உயரத்துல கட்டி உட்டாலும் இந்த நெருப்பு எறும்பு விடாம துரத்தி, கண்டுபுடிச்சி சோத்த திங்க வந்துரும். வரதுல பாதிக்கு, பாதி தண்ணியில உசுர உட்ரும். சில கம்மஞ்சோத்த தின்னுப்புட்டு தண்ணியில மயக்குதுல மிதந்து கொஞ்ச நேரம் கழிச்சி அதுகளும் செத்து போகும் . எப்பவுமே இப்படிதான். நாங்க எறும்பு சோறு சாப்பிடிறது வழக்கமா போச்சி. கிட்டதிட்ட எல்லா விவசாயிகளுக்கும் இதான் வச்சுக்கிங்களேன். அம்மா கூட சொல்லுவா எறும்ப எடுத்து போடாம சாப்பிடு.. அது கண்ணுக்கு நல்லதுன்னு..
எங்க கண்ணு எல்லாம் குட்டை தண்ணியில குளிச்சதுல செவந்து கிடந்தது. ரகு எல்லாருக்கும் நொனா பழத்தையும், புளியஞ்சோத்தையும் வச்சி கொடுத்தான். எல்லாரும் நல்லா தின்னம். அப்பத்தான் பள்ளியோடம் உடுற பெல்லு சத்தம் கேக்குது. எல்லாரும் பயந்து, பயந்து பள்ளிக்கூடத்திருக்கு போனால், கள்ளிகாட்டான் குருவி சத்தம் தவிர பள்ளிக்கூடத்துல ஒத்த ஆளு இல்ல. அங்க இருந்து பயந்து, பயந்து வீட்டுக்கு போனால் வீட்டுல யாரும் இல்ல. காட்டுல இருந்து இன்னும் யாரும் வரல... எப்படியும் ஆறு மணியாயிடும்னு தெரியும்.
மெல்ல நடந்து பாய் தெருவுக்கு போனேன். பயம் எனக்குள்ள அப்படியே இருந்தது. திலகா வீடு இருக்கிற தெருவா இருந்தாலும், எங்க வீடு இருக்கிறது இது வரைக்கும் அவளுக்கு தெரியாது. சுத்தி,முத்தி பார்த்துகிட்டே நடந்தேன். யாரோ பார்க்கிற மாதிரி தோணவும் திரும்பி பார்த்தேன். ஒரு சன்னல்ல நின்னு என்னையே உத்துப் பாத்துட்டு இருந்தா திலகா. நான் அவள பார்க்க, அவளோ எதுவும் நடக்காத மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு... அது இப்பவும் மனசுல தங்கி கிடக்கிற சிரிப்பு...
காற்று-4
அலைபேசியில் "ஏலேலோ எலலேலோ "என என் படத்தின் பாடல் சிணுங்கியதும் சட்டென விழிப்பு வந்தது.திடுக்கிட்டு எழுந்தபோது பாயை விட்டு நகர்ந்த கை மொட்டை மாடியின் தரையில் சுட உதறியபடி எழுந்தேன்.
அவள் தான் அழைத்திருந்தாள்..
சிணுங்கிய தொலைபேசியில் தேவதை என்கிற அவளின் பெயரையே பார்த்தபடி இருந்தேன்.எந்த்தனை அவமானங்களுக்கு இடையில் இந்த அழைப்பு ..?எடுக்க வேண்டாம் .நிறுத்திக்கொள்வோம் .எனது கட்டுப்பாடு உடைந்து சிதறுவதர்க்குல்லாக தொடர்பு அறுந்தது.
"என்னா சார் வெயிலு அடிச்சது தெரியாமா இருக்கீங்க..?"
பக்கத்து வீட்டு குண்டம்மா துணிகளை காய போட்டபடியே கேட்டாள்..
நான் பதில் ஏதும் பேசாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தேன்.குண்டம்மாவிர்க்கு குறைந்தது 45 வயதிருக்கும்.பெரிய ரொம்ப பெரிய உருவம் .அவளது கணவருக்கு 60 வயதிற்கு மேல்.இயலாமையின் நெருக்கத்தை அனுபவிப்பது எப்படி என அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..செயக்கில் கடை வைத்து நடத்துகிற சுசிலாவின் கணவர் அதாங்க குண்டம்மா ,தினம் வீட்டு செலவுக்கு 40 ரூபாய் கொடுப்பார் .அதில் மூன்று வேளையும் விதவிதமான உணவை செய்வாள் .அதிலும் மிச்சம் பிடித்து வட்டிக்கு விடுவாள்.அதட்டலான குரல்.அன்பானவள்.அன்பை கூட கோபமாகவே பேசுவது அவளின் இயல்பு.அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் 6 ,8 வயதில் இருக்கின்றன..
நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் பாயை சுருட்டியபடி கீழே வந்தேன் எனது வீட்டில் தொப்பி ராசா என்கிற ஏகலைவன் சுருண்டு தூங்கி கொண்டிருந்தான் .எனது உதவியாளன் .அவன் எப்பொழுதும் இப்படித்தான் .நிறைய இடமிருந்தாலும் ஏதாவதொரு மூலையில் உடம்பை குறுக்கி கொண்டு கால்களை கையால் கட்டிப்போட்டபடி உறங்குவான்..சில நேரம் அது தாயின் கருவறையில் இருக்கிறானோ என என்ன தோன்றும்,அவன் கால்களில் இருந்து கட்டு இன்னும் அவிழ்க்க வில்லை.ஆம் படபிடிப்பில் நாங்கள் கேட்ட இடத்தை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதிக்க வில்லை..எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஆனால் நாங்களோ கையில் பணமே இல்லாமல் படமெடுக்கிறோம் .பின் எப்படி அனுமதி கிடைக்கும் ..அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு வண்ணம் தீட்டி எடுக்க முடிவு செய்து எனது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து காவல் நிலையம் போல உடனே உருவாக்கினார்கள்.அப்பொழுது வண்ணம் அடிக்க மேலே ஏறியவன், கீழே விழுந்ததால் இந்த கட்டு.இன்னும் கூட பட பிடிப்பை முடித்து வந்து இவ்வளவு நாளான பிறகும் கூட நாங்கள் அந்த கட்டிடத்திற்கு மாற்று வண்ணம் பூசவில்லை..எங்களின் வலியின் நீட்சியாக அது அந்த ஊரில் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
நானும் அவனருகே பையை போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன்.தூங்க முடிய வில்லை கண்கள் படுத்த படியே அறையை நோட்டம் விட்டது.இவ்வளவு நாட்களும் தோன்றாத வெறுமை என்னை ஆட்கொண்டது.வெறுமை அடர்ந்த வெறுமை..யாருமட்ட்ற கொளைகலத்தில் நான் மட்டும் குற்றுயிரோடு நிற்பதை போலிருந்தது அந்த கணம்..
அப்போது மீண்டும் அலைபேசி ஒலித்தது.அவளாக இருக்குமோ..ஏன் இப்படி நெஞ்சை பிழிகிறாள் ..அவளை விட்டு விலகி நிற்கவே முடியாதோ.னடியாகவே மாறிப்போன அவளின் பேச்சு ,சிரிப்பு,எல்லாத்தையும் கலைத்து விட்டு சாதாரண தேவதை என்கிற அடையாளத்தோடு பேசவோ,சிநேகம்கொல்லவோ,குறைந்த பட்சம் கடைசி மனிதனிடம் காட்ட வேண்டிய பரிவு கூடவா இல்லாமல் போய் விடடாள் ..இப்போது நான் அலைபேசியை எடுத்தாலும் என்ன சொல்லுவாள்
"ஹலோ ,எந்தாச்சி,என் கூட பேச மாட்டிங்களா..எந்த பிரபலம் நீங்கள் புரியல,நோட்ஸ் எழுதி,பின்னே காலேஜ் போய் ,..."
இப்படி இன்னும் இன்னும் எத்தனைஎத்தனை வாதங்களை முன் வைப்பாள் ..வேண்டாம் வேண்டவே வேண்டாம் .அலைபேசியை ஒரு முறை எடுத்து பார்த்தால் கூட மனசு பகடை சறுக்கி விடும் என பல்லைக் கடித்தபடி கண்களை இருக்க மூடிக்கொண்டேன்..
" எலலேலோ ..".ஒலித்தபடியே இருந்தது.
அவள் தான் அழைத்திருந்தாள்..
சிணுங்கிய தொலைபேசியில் தேவதை என்கிற அவளின் பெயரையே பார்த்தபடி இருந்தேன்.எந்த்தனை அவமானங்களுக்கு இடையில் இந்த அழைப்பு ..?எடுக்க வேண்டாம் .நிறுத்திக்கொள்வோம் .எனது கட்டுப்பாடு உடைந்து சிதறுவதர்க்குல்லாக தொடர்பு அறுந்தது.
"என்னா சார் வெயிலு அடிச்சது தெரியாமா இருக்கீங்க..?"
பக்கத்து வீட்டு குண்டம்மா துணிகளை காய போட்டபடியே கேட்டாள்..
நான் பதில் ஏதும் பேசாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தேன்.குண்டம்மாவிர்க்கு குறைந்தது 45 வயதிருக்கும்.பெரிய ரொம்ப பெரிய உருவம் .அவளது கணவருக்கு 60 வயதிற்கு மேல்.இயலாமையின் நெருக்கத்தை அனுபவிப்பது எப்படி என அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..செயக்கில் கடை வைத்து நடத்துகிற சுசிலாவின் கணவர் அதாங்க குண்டம்மா ,தினம் வீட்டு செலவுக்கு 40 ரூபாய் கொடுப்பார் .அதில் மூன்று வேளையும் விதவிதமான உணவை செய்வாள் .அதிலும் மிச்சம் பிடித்து வட்டிக்கு விடுவாள்.அதட்டலான குரல்.அன்பானவள்.அன்பை கூட கோபமாகவே பேசுவது அவளின் இயல்பு.அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் 6 ,8 வயதில் இருக்கின்றன..
நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் பாயை சுருட்டியபடி கீழே வந்தேன் எனது வீட்டில் தொப்பி ராசா என்கிற ஏகலைவன் சுருண்டு தூங்கி கொண்டிருந்தான் .எனது உதவியாளன் .அவன் எப்பொழுதும் இப்படித்தான் .நிறைய இடமிருந்தாலும் ஏதாவதொரு மூலையில் உடம்பை குறுக்கி கொண்டு கால்களை கையால் கட்டிப்போட்டபடி உறங்குவான்..சில நேரம் அது தாயின் கருவறையில் இருக்கிறானோ என என்ன தோன்றும்,அவன் கால்களில் இருந்து கட்டு இன்னும் அவிழ்க்க வில்லை.ஆம் படபிடிப்பில் நாங்கள் கேட்ட இடத்தை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதிக்க வில்லை..எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஆனால் நாங்களோ கையில் பணமே இல்லாமல் படமெடுக்கிறோம் .பின் எப்படி அனுமதி கிடைக்கும் ..அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு வண்ணம் தீட்டி எடுக்க முடிவு செய்து எனது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து காவல் நிலையம் போல உடனே உருவாக்கினார்கள்.அப்பொழுது வண்ணம் அடிக்க மேலே ஏறியவன், கீழே விழுந்ததால் இந்த கட்டு.இன்னும் கூட பட பிடிப்பை முடித்து வந்து இவ்வளவு நாளான பிறகும் கூட நாங்கள் அந்த கட்டிடத்திற்கு மாற்று வண்ணம் பூசவில்லை..எங்களின் வலியின் நீட்சியாக அது அந்த ஊரில் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
நானும் அவனருகே பையை போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன்.தூங்க முடிய வில்லை கண்கள் படுத்த படியே அறையை நோட்டம் விட்டது.இவ்வளவு நாட்களும் தோன்றாத வெறுமை என்னை ஆட்கொண்டது.வெறுமை அடர்ந்த வெறுமை..யாருமட்ட்ற கொளைகலத்தில் நான் மட்டும் குற்றுயிரோடு நிற்பதை போலிருந்தது அந்த கணம்..
அப்போது மீண்டும் அலைபேசி ஒலித்தது.அவளாக இருக்குமோ..ஏன் இப்படி நெஞ்சை பிழிகிறாள் ..அவளை விட்டு விலகி நிற்கவே முடியாதோ.னடியாகவே மாறிப்போன அவளின் பேச்சு ,சிரிப்பு,எல்லாத்தையும் கலைத்து விட்டு சாதாரண தேவதை என்கிற அடையாளத்தோடு பேசவோ,சிநேகம்கொல்லவோ,குறைந்த பட்சம் கடைசி மனிதனிடம் காட்ட வேண்டிய பரிவு கூடவா இல்லாமல் போய் விடடாள் ..இப்போது நான் அலைபேசியை எடுத்தாலும் என்ன சொல்லுவாள்
"ஹலோ ,எந்தாச்சி,என் கூட பேச மாட்டிங்களா..எந்த பிரபலம் நீங்கள் புரியல,நோட்ஸ் எழுதி,பின்னே காலேஜ் போய் ,..."
இப்படி இன்னும் இன்னும் எத்தனைஎத்தனை வாதங்களை முன் வைப்பாள் ..வேண்டாம் வேண்டவே வேண்டாம் .அலைபேசியை ஒரு முறை எடுத்து பார்த்தால் கூட மனசு பகடை சறுக்கி விடும் என பல்லைக் கடித்தபடி கண்களை இருக்க மூடிக்கொண்டேன்..
" எலலேலோ ..".ஒலித்தபடியே இருந்தது.
Monday, December 20, 2010
காற்று -3
பசி ..பாரிய பசி ..தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் எதை அழிப்பது..நல்ல விவசாய நிலத்தை விட்டு விட்டு சேற்றில் அலைந்த கைகளை துடைத்து விட்டு, நீ நகர சகடில் கால் பதித்ததற்கு யார் பொறுப்பு..நான்தானே காரணம்..இனம் அழியும் போது புடனியில் கால் வைத்து கொண்டு தூங்கிய நான் பசியை பற்றி பேசுகிறேன்.உலகெங்கும் பசியோடு திரியும் எத்தனையோ நபர்களில் நானும் ஒருவன் அவ்வளவே..
ரதி என்கிற முதல் கருவுக்கான கதைப்பாத்திரங்கலான ரத்தினம்-திலகாவை மனதுக்குள் உள்வாங்கிய தருணம் மிக முக்கியமானது.அது மிகுந்த அற்புதமாக என் வாழ்வோடு பின்னப்பட்டிருந்தது..நான் வாழ்ந்த பெரம்பலூர் வட்டம் திருச்சியோடு இணைந்திருந்த காலம்..மானம் பார்த்த விவசாய வாழ்க்கையிலிருந்து துவங்கும் எனக்கான தருணங்கள்..
எங்கே பார்த்தாலும் விரிஞ்சி கிடக்குற சோள தட்டைகள். கம்மந்தட்டைகல்லுன்னு மஞ்சள் அப்புனாப்புல கெடக்குற ஊர்தான் செட்டிக்குளம்.ஊருக்கு நடுவுல 800 வருசத்துக்கு முன்னாடி கட்டின சிவன் கோயிலு நிமிந்து நிற்கும்..ஊரு வருதுங்கறத பக்கத்துருலருந்தே பலதடவை சொல்லிடுவோம் .. நல்ல மழை பெஞ்சா ஏரில தண்ணி வரும். அந்த வருஷம் மட்டும் நெல்லு விளையும்,மத்த நாள்ல இருக்குற ஒரே பண பயிறு வெங்காயம் அது கூட எங்க ஊர்ல மஞ்சலாதான் தழைக்கும்,அம்புட்டு தண்ணி வசதி உள்ள ஊரு அது. சிறகடிக்கிற கள்ளிக்கட்டான் குருவிகளும், சிட்டுக்குருவிகளும் 'கியாமிய கிய மியா' ன்னு கத்திக்கிட்டு திரியறதுதான் எங்களுக்கு சங்கீதம்..
நான், தவக்களை, வழுக்கை கண்ணன் எல்லாரும் எப்பவும் பள்ளியோடத்துக்குல்லையே இருக்க மாட்டம்..பள்ளியோடத்துக்கு போறதுக்கு முன்னாடி வீட்ல இருக்குற ஒரே எண்ணையான, விளக்கெண்ணைய தலையில தடவிக்கிட்டு, அம்மா ராத்திரி புழிச்ச சட்டியில உருட்டி போட்ட கம்புசோத்த ஒரு உருண்டைய தின்னுப்புட்டு கிளம்புவோம் பாருங்க..அடடா சிட்டுக்குருவிதான் அந்த வாழ்க்கை..கிட்டத்தட்ட எல்லா வீட்லயும் இதே தான் ..பெரிய மாற்றம்ன்னா அது சோள சோறாதான் இருக்கும் . தவக்களை எங்களுக்கு தலைவன்..பாடப்புத்தகத்த பள்ளியோடத்துக்கு முன்னாடி இருக்குற பாலத்துக்கு கீழ வச்சிட்டு இருங்குலாம் பழம் பொறுக்க கிளம்பிடுவோம்..ஓணான்னா தவக்களை விடவே மாட்டான்..எல்லாரும் பழத்த பொருக்கி சட்டைய அவுத்து அதுல முடிஞ்சுக்குவோம்.எப்பவும் எங்களோட ஒரே சட்ட வருசத்துக்கு ஒருக்கா பள்ளியோடத்துல தர இலவச மஞ்ச டவுசரும் வெள்ளை சட்டையும்தான்..கால் வருஷம் வரதுக்குள்ள கால் சட்டை பின்னாடி ரெண்டு நிலா வட்டம் உளுந்துடும்,சாட்டைல பித்தான தவிர வேற நிறைய இருக்கும்..நாங்க பொறுக்குன பழத்துல தவக்கலைக்கு பங்கு உண்டு..அதே மாதிரி அவன் அடிச்சா எல்லா ஓனான் மேலயும் பாறையில படுக்க வச்சி ஒன்னுக்கு அடிக்கிற உரிமை எங்களுக்கு உண்டு..
அப்படித்தான் ஒருநாளு..பத்து பைசாவ கண்ணன் அவங்க பெரியப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்துட்டான் ..அத வச்சிட்டு ஒரு பெரிய திட்டமே போட்டான் தவக்களை..
நாங்க எல்லாரும் மொத்தமா ஒவ்வொரு பெட்டிக்கடையா போக வேண்டியது..மொத்தமா ஒரு கடைல நின்னுக்கிட்டு எனக்கு அது வேணும் இதுவேனும்னு கடைக்காரன்கிட்ட சொல்ல வேண்டியது..அவன் இதுவா இதுவான்னு ஒன்னொன்னா கேட்க,அது இல்ல,இது இல்லன்னு சொல்லறதுக்குள்ள பொட்டிக்கடையில கண்ணாடி போட்ட்லே மேல அடுக்கி வச்சுருக்கிற சூசுபறி ,மைசூர் பாக்கு பாக்கேட்டுன்னு ஒன்னு ஒண்ணா அமுக்கி கடைசியா இருக்கரவன்கிட்ட கொடுக்க வேண்டியது..மொத்தம் மூணு கடையில எடுத்தாச்சி..நாலாவது கடையில எடுக்கும் போதுதான் அவ பார்த்துட்டா..
அவ பேரு திலகா..................................
ரதி என்கிற முதல் கருவுக்கான கதைப்பாத்திரங்கலான ரத்தினம்-திலகாவை மனதுக்குள் உள்வாங்கிய தருணம் மிக முக்கியமானது.அது மிகுந்த அற்புதமாக என் வாழ்வோடு பின்னப்பட்டிருந்தது..நான் வாழ்ந்த பெரம்பலூர் வட்டம் திருச்சியோடு இணைந்திருந்த காலம்..மானம் பார்த்த விவசாய வாழ்க்கையிலிருந்து துவங்கும் எனக்கான தருணங்கள்..
எங்கே பார்த்தாலும் விரிஞ்சி கிடக்குற சோள தட்டைகள். கம்மந்தட்டைகல்லுன்னு மஞ்சள் அப்புனாப்புல கெடக்குற ஊர்தான் செட்டிக்குளம்.ஊருக்கு நடுவுல 800 வருசத்துக்கு முன்னாடி கட்டின சிவன் கோயிலு நிமிந்து நிற்கும்..ஊரு வருதுங்கறத பக்கத்துருலருந்தே பலதடவை சொல்லிடுவோம் .. நல்ல மழை பெஞ்சா ஏரில தண்ணி வரும். அந்த வருஷம் மட்டும் நெல்லு விளையும்,மத்த நாள்ல இருக்குற ஒரே பண பயிறு வெங்காயம் அது கூட எங்க ஊர்ல மஞ்சலாதான் தழைக்கும்,அம்புட்டு தண்ணி வசதி உள்ள ஊரு அது. சிறகடிக்கிற கள்ளிக்கட்டான் குருவிகளும், சிட்டுக்குருவிகளும் 'கியாமிய கிய மியா' ன்னு கத்திக்கிட்டு திரியறதுதான் எங்களுக்கு சங்கீதம்..
நான், தவக்களை, வழுக்கை கண்ணன் எல்லாரும் எப்பவும் பள்ளியோடத்துக்குல்லையே இருக்க மாட்டம்..பள்ளியோடத்துக்கு போறதுக்கு முன்னாடி வீட்ல இருக்குற ஒரே எண்ணையான, விளக்கெண்ணைய தலையில தடவிக்கிட்டு, அம்மா ராத்திரி புழிச்ச சட்டியில உருட்டி போட்ட கம்புசோத்த ஒரு உருண்டைய தின்னுப்புட்டு கிளம்புவோம் பாருங்க..அடடா சிட்டுக்குருவிதான் அந்த வாழ்க்கை..கிட்டத்தட்ட எல்லா வீட்லயும் இதே தான் ..பெரிய மாற்றம்ன்னா அது சோள சோறாதான் இருக்கும் . தவக்களை எங்களுக்கு தலைவன்..பாடப்புத்தகத்த பள்ளியோடத்துக்கு முன்னாடி இருக்குற பாலத்துக்கு கீழ வச்சிட்டு இருங்குலாம் பழம் பொறுக்க கிளம்பிடுவோம்..ஓணான்னா தவக்களை விடவே மாட்டான்..எல்லாரும் பழத்த பொருக்கி சட்டைய அவுத்து அதுல முடிஞ்சுக்குவோம்.எப்பவும் எங்களோட ஒரே சட்ட வருசத்துக்கு ஒருக்கா பள்ளியோடத்துல தர இலவச மஞ்ச டவுசரும் வெள்ளை சட்டையும்தான்..கால் வருஷம் வரதுக்குள்ள கால் சட்டை பின்னாடி ரெண்டு நிலா வட்டம் உளுந்துடும்,சாட்டைல பித்தான தவிர வேற நிறைய இருக்கும்..நாங்க பொறுக்குன பழத்துல தவக்கலைக்கு பங்கு உண்டு..அதே மாதிரி அவன் அடிச்சா எல்லா ஓனான் மேலயும் பாறையில படுக்க வச்சி ஒன்னுக்கு அடிக்கிற உரிமை எங்களுக்கு உண்டு..
அப்படித்தான் ஒருநாளு..பத்து பைசாவ கண்ணன் அவங்க பெரியப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்துட்டான் ..அத வச்சிட்டு ஒரு பெரிய திட்டமே போட்டான் தவக்களை..
நாங்க எல்லாரும் மொத்தமா ஒவ்வொரு பெட்டிக்கடையா போக வேண்டியது..மொத்தமா ஒரு கடைல நின்னுக்கிட்டு எனக்கு அது வேணும் இதுவேனும்னு கடைக்காரன்கிட்ட சொல்ல வேண்டியது..அவன் இதுவா இதுவான்னு ஒன்னொன்னா கேட்க,அது இல்ல,இது இல்லன்னு சொல்லறதுக்குள்ள பொட்டிக்கடையில கண்ணாடி போட்ட்லே மேல அடுக்கி வச்சுருக்கிற சூசுபறி ,மைசூர் பாக்கு பாக்கேட்டுன்னு ஒன்னு ஒண்ணா அமுக்கி கடைசியா இருக்கரவன்கிட்ட கொடுக்க வேண்டியது..மொத்தம் மூணு கடையில எடுத்தாச்சி..நாலாவது கடையில எடுக்கும் போதுதான் அவ பார்த்துட்டா..
அவ பேரு திலகா..................................
காற்று.2
இருட்டிலிருந்தேன் ,,..
வலியை விடக் கொடுமையானது இருட்டு..வழி வழியாய் பழக்கப்படுத்தப்பட்ட இருட்டு அச்சமூட்டக்கூடியது.அதிலும் எதுவென்று புரியாமல் மனதை அலைகழிக்கும் இருள் வெறுமையை பீறிட்டு எழ செய்கிறது.எனக்கு இப்போது அப்படித்தானிருந்தது..
வானத்தில் கருத்த மத யானைகள் சிவசெனைகளை போல பால் நிற மேகங்களை துரத்தி பிடித்துக்கொண்டிருந்தன.குஜராத்தின் கலவர வெளிகளில் ஓடி ஒழிய இடம் தெரியாமல் பதித்து போன சிறுமியின் முகத்திற்கு ஒப்பாய் இருந்தது நிலவின் பதட்டம்.
நானும் நிலவை போலவே கருத்துக்கிடந்த காரைத்தரையில் படுத்திருந்தேன்.ஏன் இப்படி ஆணோமென மனது குமைந்து கொண்டிருந்தது.தூங்க முடியவில்லை.சாலைகளில் நாயின் ஊளை கூட நின்று விட்டது..காற்றும் மனிதர்களின் மீதான நேசத்தை நகரமயமாக்களால் தொலைத்து விட்டிருந்தது..
இந்த வயதில் காதல் என்கிற மாயவலை தேவைதானா ..நாட்களை எண்ணி நகர்த்துகிற எனக்கு அவசியமில்லாத தேவைதான் இது .ஆனாலும் பிடரி மயிரை பிடித்து உலுக்கும் மனதை என்ன செய்ய..ஒருவேளை என்ன ஓட்டங்களை தடைப்படுத்தும் இயந்திரம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வானத்தையும் அவ்வப்போது அலைபேசியையும் பார்த்துக்கொண்டிருக்கிற அவஸ்த்தை இருந்திருக்காதோ..குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியும் ஒயைந்தாகி விட்டது.விடியும் வரை இனி எந்த பதில்களும் வரப்போவதில்லை.விடிந்தாலும் பதில் வருமா என்பதும் நிச்சயமில்லை.தொடர்ந்த பல இரவுகளில் நானே தொடங்கி நானே முடிக்கும் பேரவலம்..
மூன்று நாட்களுக்கு முன்பு பேசினாள்.அப்போது கூட ஒரு தேர்ந்த நடிகைக்கே உண்டான மனோபாவத்துடன் எனது வலிகள் வார்த்தையாக விழும்போதெல்லாம் அம்மா கூப்பிடுவதாக துண்டித்து விடுவாள் .அந்த தேவதையை சிந்தித்தே மனது குமைந்து இரவுகளை தின்றது மனது.
ஆம் அவள் தேவதை தான் ..என் படத்தின் நாயகி தேவதை தான்..
வலியை விடக் கொடுமையானது இருட்டு..வழி வழியாய் பழக்கப்படுத்தப்பட்ட இருட்டு அச்சமூட்டக்கூடியது.அதிலும் எதுவென்று புரியாமல் மனதை அலைகழிக்கும் இருள் வெறுமையை பீறிட்டு எழ செய்கிறது.எனக்கு இப்போது அப்படித்தானிருந்தது..
வானத்தில் கருத்த மத யானைகள் சிவசெனைகளை போல பால் நிற மேகங்களை துரத்தி பிடித்துக்கொண்டிருந்தன.குஜராத்தின் கலவர வெளிகளில் ஓடி ஒழிய இடம் தெரியாமல் பதித்து போன சிறுமியின் முகத்திற்கு ஒப்பாய் இருந்தது நிலவின் பதட்டம்.
நானும் நிலவை போலவே கருத்துக்கிடந்த காரைத்தரையில் படுத்திருந்தேன்.ஏன் இப்படி ஆணோமென மனது குமைந்து கொண்டிருந்தது.தூங்க முடியவில்லை.சாலைகளில் நாயின் ஊளை கூட நின்று விட்டது..காற்றும் மனிதர்களின் மீதான நேசத்தை நகரமயமாக்களால் தொலைத்து விட்டிருந்தது..
இந்த வயதில் காதல் என்கிற மாயவலை தேவைதானா ..நாட்களை எண்ணி நகர்த்துகிற எனக்கு அவசியமில்லாத தேவைதான் இது .ஆனாலும் பிடரி மயிரை பிடித்து உலுக்கும் மனதை என்ன செய்ய..ஒருவேளை என்ன ஓட்டங்களை தடைப்படுத்தும் இயந்திரம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வானத்தையும் அவ்வப்போது அலைபேசியையும் பார்த்துக்கொண்டிருக்கிற அவஸ்த்தை இருந்திருக்காதோ..குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியும் ஒயைந்தாகி விட்டது.விடியும் வரை இனி எந்த பதில்களும் வரப்போவதில்லை.விடிந்தாலும் பதில் வருமா என்பதும் நிச்சயமில்லை.தொடர்ந்த பல இரவுகளில் நானே தொடங்கி நானே முடிக்கும் பேரவலம்..
மூன்று நாட்களுக்கு முன்பு பேசினாள்.அப்போது கூட ஒரு தேர்ந்த நடிகைக்கே உண்டான மனோபாவத்துடன் எனது வலிகள் வார்த்தையாக விழும்போதெல்லாம் அம்மா கூப்பிடுவதாக துண்டித்து விடுவாள் .அந்த தேவதையை சிந்தித்தே மனது குமைந்து இரவுகளை தின்றது மனது.
ஆம் அவள் தேவதை தான் ..என் படத்தின் நாயகி தேவதை தான்..
Sunday, December 19, 2010
பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்...
காற்று.1
நீங்கள் ஒரு சினிமா பைத்தியமா..?
நீங்கள் வாழ்வை சந்தோசமாகக விரும்புவரா..?
நீங்கள் வலிகளை உணர்ந்தவரா..?
நீங்கள் சாதிக்க விரும்பியவரா..?
நீங்கள் தோல்வியை அனுபவித்தவரா..?
இப்படி எல்லாவட்டிரிலும் ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்வில் நுழைந்திருக்குமானால்..நானும் உங்களில் ஒருவனாக அறியப்படுவேன்..என் பெயர் மூர்த்தி.. பிணத்தை கொத்தித்தின்னும் கழுகு போல சினிமா என்னை கொத்தி தின்றதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் எழுதுகிறேன்..
ரதி ..இங்கிருந்துதான் நான் துவங்குகிறேன்..யாரும் அறியாத பொழுதொன்றில் என் மீது நம்பிக்கை கொண்டு விழுந்த விதை அது..தாயின் கருவறையை போல பல வருடங்கள் என்னுள் உருத்திரண்டு கொண்டிருந்தது..அதற்க்கு கைகளையும் கால்களையும் நான் பார்த்த மனிதர்களில் இருந்து புதுப்பித்து கொண்டே வந்தேன்..நான் வாழ்ந்த சூழலுக்கு பழக்கப்படுத்தியிருந்தேன்..ரத்தினமும் திலகாவும் என்னை நிரப்பியிருந்தார்கள்..ஆனாலும் வயிறு பசிக்கத்தான் செய்ததது..குடும்பத்தை விட்டு நான் புழுதியேறிய தெருவை விட்டு, என் அன்பையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை விட்டு புறாக்கூன்டுகளை போல எச்சமும்.குப்பையும் மனக்கிடன்கெங்கும் வழிந்த சென்னை நகரத்திற்குள் வந்ததிலிருந்து..இந்த பசியும் என்னோடு ஒட்டிக்கொண்டது..உதவி இயக்குனராய் சேர்வது என்பது அத்தனை எளிதல்ல என்கிற சூத்திரத்தை நான் சிறு வயதிலிருந்தே கற்று வந்தவன் தான் ஆனாலும்..ஒரு வேலை உணவுக்கே தாளமிடுவோம் என நினைத்து பார்க்கவில்லை..
நீங்கள் ஒரு சினிமா பைத்தியமா..?
நீங்கள் வாழ்வை சந்தோசமாகக விரும்புவரா..?
நீங்கள் வலிகளை உணர்ந்தவரா..?
நீங்கள் சாதிக்க விரும்பியவரா..?
நீங்கள் தோல்வியை அனுபவித்தவரா..?
இப்படி எல்லாவட்டிரிலும் ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்வில் நுழைந்திருக்குமானால்..நானும் உங்களில் ஒருவனாக அறியப்படுவேன்..என் பெயர் மூர்த்தி.. பிணத்தை கொத்தித்தின்னும் கழுகு போல சினிமா என்னை கொத்தி தின்றதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் எழுதுகிறேன்..
ரதி ..இங்கிருந்துதான் நான் துவங்குகிறேன்..யாரும் அறியாத பொழுதொன்றில் என் மீது நம்பிக்கை கொண்டு விழுந்த விதை அது..தாயின் கருவறையை போல பல வருடங்கள் என்னுள் உருத்திரண்டு கொண்டிருந்தது..அதற்க்கு கைகளையும் கால்களையும் நான் பார்த்த மனிதர்களில் இருந்து புதுப்பித்து கொண்டே வந்தேன்..நான் வாழ்ந்த சூழலுக்கு பழக்கப்படுத்தியிருந்தேன்..ரத்தினமும் திலகாவும் என்னை நிரப்பியிருந்தார்கள்..ஆனாலும் வயிறு பசிக்கத்தான் செய்ததது..குடும்பத்தை விட்டு நான் புழுதியேறிய தெருவை விட்டு, என் அன்பையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை விட்டு புறாக்கூன்டுகளை போல எச்சமும்.குப்பையும் மனக்கிடன்கெங்கும் வழிந்த சென்னை நகரத்திற்குள் வந்ததிலிருந்து..இந்த பசியும் என்னோடு ஒட்டிக்கொண்டது..உதவி இயக்குனராய் சேர்வது என்பது அத்தனை எளிதல்ல என்கிற சூத்திரத்தை நான் சிறு வயதிலிருந்தே கற்று வந்தவன் தான் ஆனாலும்..ஒரு வேலை உணவுக்கே தாளமிடுவோம் என நினைத்து பார்க்கவில்லை..
Subscribe to:
Posts (Atom)